சோமனூர் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் திறப்பு

கோவை : சோமனூர் பகுதியில் வேளாண்மை துறை சார்பில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கனகராஜ் நேற்று திறந்து வைத்தார்.

கோவை : சோமனூர் பகுதியில் வேளாண்மை துறை சார்பில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கனகராஜ் நேற்று திறந்து வைத்தார்.



இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் மற்றும் உரமூட்டைகள் உள்ளிட்டவை துணை விரிவாக்க மையத்திலிருந்து வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சோமனூரில் இயங்கி வந்த விரிவாக்க மையத்தின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, பொலிவான புதிய கட்டிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் சோமனூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டது.



இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா, சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில அரசு திட்டம்) சித்ராதேவி, சூலூர் வட்டம் வேளாண்மை உதவி இயக்குநர் ஷபி அகமது, வேளாண்மை அலுவலர் சுரேஸ்குமார், சோமனூர் துணை வேளாண்மை அலுவலர் செந்தில், உதவி வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன், வேளாண் அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...