கோவை : கோவை மாநகர் மாவட்டம் சார்பில் அமைய உள்ள கலைஞர் நூலகத்திற்கு, வர்த்தக அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக்கிடம் கழக நிர்வாகிகள் வழங்கினர்.
கோவை : கோவை மாநகர் மாவட்டம் சார்பில் அமைய உள்ள கலைஞர் நூலகத்திற்கு, வர்த்தக அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக்கிடம் கழக நிர்வாகிகள் வழங்கினர்.
கோவை மாநகர் மாவட்டம் சார்பில் தெப்பக்குளம் பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் புதியதாக திறக்கப்பட உள்ளது. இந்த நூலகத்திற்கு, ரூ. 25,000 மதிப்புள்ள நூல்களை வர்த்தக அணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் ரகுமான், மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்க்கிடம் வழங்கினார். இதேபோல, ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் வணங்காமுடி, துணைத்தலைவர் சி.கே.செல்லப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் நூல்களை வழங்கினர். பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் இன்று மட்டும் ரூ. 50,000 மதிப்புள்ள நூல்கள் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மாவட்டம் சார்பில் தெப்பக்குளம் பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் புதியதாக திறக்கப்பட உள்ளது. இந்த நூலகத்திற்கு, ரூ. 25,000 மதிப்புள்ள நூல்களை வர்த்தக அணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் ரகுமான், மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்க்கிடம் வழங்கினார். இதேபோல, ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் வணங்காமுடி, துணைத்தலைவர் சி.கே.செல்லப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் நூல்களை வழங்கினர். பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் இன்று மட்டும் ரூ. 50,000 மதிப்புள்ள நூல்கள் வழங்கப்பட்டுள்ளது.