கோவை : கோவை மாவட்டத்திற்கு கூடுதல் தலைமை வனப் பாதுகாவலராக ஏ. உதயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை : கோவை மாவட்டத்திற்கு கூடுதல் தலைமை வனப் பாதுகாவலராக ஏ. உதயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சில தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்புகளை அரசு வழங்கியது. அதன்படி, தமிழக பல்லுயிர் வாரியத்தின் உறுப்பினரும், முன்னாள் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலருமான ஏ. உதயன், கோவை மாவட்ட கூடுதல் தலைமை வனப் பாதுகாவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, முன்னாள் தலைமை வனப் பாதுகாவலராக இருந்த தீபக் ஶ்ரீவத்ஸவா, கூடுதல் தலைமை வனப் பாதுகாவலராக பதவி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்,
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சிறப்பு செயலாளராகவும் (வனம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018 மே மாதம் முதல் கோவை மாவட்ட வனப் பாதுகாவலராக பொறுப்பேற்ற ஶ்ரீவத்ஸவா, முன்னதாக, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது தலைமையில் கோவை மண்டலத்தில் விநாயகன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய யானைகளை இடமாற்றம் செய்யும் முக்கிய 2 ஆபரேஷன்கள் நடைபெற்றன. இவரது விடுமாறு காலத்தில், வடக்கு பிராந்தியத்தின் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் கே.கே. கவுசல் பணியாற்றுவார்.
இந்தப் புதிய நியமனங்கள் மூலம், தமிழ்நாடு வன அகாடமி கூடுதல் தலைமை வனப் பாதுகாவர் என்ற புதிய பொறுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மட்டுமில்லாது, வேலூர், தர்மபுரி ஆகிய மாவட்ட வனத்துறையின் தலைமை வனப்பதுகாவலர்கள் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்த உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ள நிலையில், பதவி உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்புகள் பெற்ற அதிகாரிகள் விரைவில் பொறுப்பேற்பார்கள் எனத் தெரிகிறது.
சில தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்புகளை அரசு வழங்கியது. அதன்படி, தமிழக பல்லுயிர் வாரியத்தின் உறுப்பினரும், முன்னாள் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலருமான ஏ. உதயன், கோவை மாவட்ட கூடுதல் தலைமை வனப் பாதுகாவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, முன்னாள் தலைமை வனப் பாதுகாவலராக இருந்த தீபக் ஶ்ரீவத்ஸவா, கூடுதல் தலைமை வனப் பாதுகாவலராக பதவி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்,
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சிறப்பு செயலாளராகவும் (வனம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018 மே மாதம் முதல் கோவை மாவட்ட வனப் பாதுகாவலராக பொறுப்பேற்ற ஶ்ரீவத்ஸவா, முன்னதாக, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது தலைமையில் கோவை மண்டலத்தில் விநாயகன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய யானைகளை இடமாற்றம் செய்யும் முக்கிய 2 ஆபரேஷன்கள் நடைபெற்றன. இவரது விடுமாறு காலத்தில், வடக்கு பிராந்தியத்தின் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் கே.கே. கவுசல் பணியாற்றுவார்.
இந்தப் புதிய நியமனங்கள் மூலம், தமிழ்நாடு வன அகாடமி கூடுதல் தலைமை வனப் பாதுகாவர் என்ற புதிய பொறுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மட்டுமில்லாது, வேலூர், தர்மபுரி ஆகிய மாவட்ட வனத்துறையின் தலைமை வனப்பதுகாவலர்கள் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்த உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ள நிலையில், பதவி உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்புகள் பெற்ற அதிகாரிகள் விரைவில் பொறுப்பேற்பார்கள் எனத் தெரிகிறது.