வீட்டை விட்டு வெளியேற சொன்னதால் ஆத்திரம் : கோவையில் தங்கையை ஆத்திரத்தில் கொலை செய்த முதியவர் கைது

கோவை : சிங்காநல்லூர் அருகே வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிய தங்கையை வெட்டில் கொலை செய்த முதியவரை போலீசார்கைது செய்தனர்.

கோவை : சிங்காநல்லூர் அருகே வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிய தங்கையை வெட்டில் கொலை செய்த முதியவரை போலீசார்கைது செய்தனர். 

சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடை பகுதியைச் சேர்ந்த முதியவர் வேலுச்சாமி (85). இவரது தங்கை பேச்சியம்மாள் (70). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ராஜ வீதியில் இருக்கும் தங்களது வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், பேச்சியம்மாள் அவரது வீட்டில் உள்ள கழிவறையில் வலுக்கி விழுந்த நிலையில், மயக்கத்தில் இருந்தார். இதைக் கண்ட அவரின் மகள் கலாமனி பேச்சியம்மாளை அக்கம் பக்கத்தினர் துணையுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், அங்கு மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மேலும், மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனையில் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சிங்காநல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் அர்ஜூன் குமார், போஸ், காசி பாண்டியன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மூதாட்டி மரணம் தொடர்பாக விசாரித்தனஎ. அதில், மூதாட்டியை அவரது அண்ணன் வேலுச்சாமி கொலை செய்ததை உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து, வேலுச்சாமியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், வீட்டை விட்டு வெளியேற சொல்லியதால் ஆத்திரத்தில் தனது தங்கையை அரிவாளால் வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...