கல்லார் அரசு பழப்பண்ணையில் கொத்து கொத்தாய் காய்த்து தொங்கும் அரிய வகை மங்குஸ்தான் பழங்கள்

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் மருத்துவ குணம் நிறைந்த அரிய வகை பழமான மங்குஸ்தான் பழங்களின் இரண்டாம் சீசன் தற்போது தொடங்கியுள்ளது.


கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் மருத்துவ குணம் நிறைந்த அரிய வகை பழமான மங்குஸ்தான் பழங்களின் இரண்டாம் சீசன் தற்போது தொடங்கியுள்ளது. 



நீலகிரி மலையடிவாரத்தில், அடர்ந்த வனப்பகுதியின் அருகே அமைந்துள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணை கடந்த 1900 ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவக்கபட்டதாகும். சுமார், இருபது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த இப்பழ பண்ணையில் ஆண்டு முழுவதும் ஒரே சீரான சீதோஷின நிலை நிலவுவதால், நாட்டில் மிக சில இடங்களில் மட்டுமே விளையக்கூடிய துரியன், மங்குஸ்தான், வெண்ணைப்பழம், ரம்புட்டான், சிங்கபூர் பலா, பச்சை ஆப்பிள் உள்ளிட்ட பல அரிய வகை மருத்துவ குணம் மிக்க பழ வகைகள் விளைகின்றன. தற்போது, பழங்களின் அரசி என போற்றப்படும் மங்குஸ்தான் பழ சீசன் துவங்கியுள்ளதால், இதன் மரங்களில் ஏராளமான பழங்கள் காய்த்து பழுக்கத் துவங்கியுள்ளன.

இதன்மேல், தோல் பகுதி சற்று தடிமனாகவும், இதனை உடைத்தால் நான்கு அல்லது ஐந்து மிக மென்மையான வெண்மை நிற சுளைகள் காணப்படும். இப்பழங்கள் உடலுக்கு குளிர்ச்சியினையும், உடனடி குளுக்கோஸ் சக்தியினையும் வழங்கும் என்பதோடு, குடல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. சுவை மிகுந்த இப்பழம் கிலோ ஒன்றுக்கு ரூ. 400 முதல் ரூ. 500 வரை விலை போகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் இப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...