கோவை : அ.தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என எதிர்பார்ப்பதாக கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோவை : அ.தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என எதிர்பார்ப்பதாக கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- 50 ஆண்டுகாலமாக அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மூன்று மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இன்றைய தினம் அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமான படை வீரர் அபிநந்தன் வீட்டிற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக வீட்டுக்கு சென்று ஆறுதல் சொல்லி இருக்கின்றார். பிரதமரிடமும் இதுகுறித்து பேசி இருக்கிறோம்.
கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. கூட்டணி இறுதியானவுடன் பத்திரிகையாளர்களுக்கு சொல்கின்றோம். மேலும், அ.தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வரும் என எதிர்பார்க்கின்றோம், இவ்வாறு கூறினார்.