கோவையில் பணத்தை திருடியதாக கொலை செய்த வழக்கு : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை : கோவையில்பணத்தை திருடியதாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை : கோவையில்பணத்தை திருடியதாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ஆட்டோ ரமேஷ், முத்துமாரியப்பன், மோகன் (எ) மோசஸ் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் மூவரும் கோவை அரசு மருத்துவ கல்லூரி எதிரில் உள்ள நடைபாதையில் தங்கி அவ்வப்போது சமையல் வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி, மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்பவரின் மகன் பிரேம்குமார் (எ) பிரவீன்குமார் அவ்வழியே நடந்து சென்றபோது, அவர் வைத்திருந்த 300 ரூபாய் காணவில்லை. இதனை நடைபாதையில் இருந்த மூவரும் தான் எடுத்துள்ளதாக கருதி அவர்களிடம் அதனை திருப்பி கொடுக்கும்படி கேட்டு முறையிட்டுள்ளார். ஆனால், மூவரும் இதனை நாங்கள் எடுக்கவில்லை என கூறியுள்ளனர். இதனை நம்ப மறுத்த பிரவீன், மரியாதையாக பணத்தை கொடுத்து விடுங்கள் இல்லையெனில், உங்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டியபடியே அருகில் இருந்த ஸ்லாபை எடுத்து உடைத்து மோகனை தாக்கியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டபட்ட பிரவீனுக்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000-மும் அபராதம் விதித்து முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...