நீலகிரி : உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துறையில் லஞ்ச ஒழிப்பு துறையினர்
நீலகிரி : உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துறையில் லஞ்ச ஒழிப்பு துறையினர்
நடத்திய சோதனையில், கணக்கில் வராத 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல அலுவலர் கைது செய்யப்பட்டார்.

உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் 27 உண்டு உறைவிட பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கலைநிகழ்ச்சி நடத்த அரசால் வழங்கப்பட்டது. இந்த நிதியில் ஒரு லட்சம் காசோலை வழங்க ஒவ்வொரு பள்ளியிடம் இருந்தும், ரூ. 50,000 லஞ்சம் பெறுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி.எஸ்.பி. தட்சணா மூர்த்தி, ஆய்வாளர் கீதா லட்சுமி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துறை அலுவலகத்தில் திடிர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிவேலனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நடத்திய சோதனையில், கணக்கில் வராத 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல அலுவலர் கைது செய்யப்பட்டார்.

உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் 27 உண்டு உறைவிட பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கலைநிகழ்ச்சி நடத்த அரசால் வழங்கப்பட்டது. இந்த நிதியில் ஒரு லட்சம் காசோலை வழங்க ஒவ்வொரு பள்ளியிடம் இருந்தும், ரூ. 50,000 லஞ்சம் பெறுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி.எஸ்.பி. தட்சணா மூர்த்தி, ஆய்வாளர் கீதா லட்சுமி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துறை அலுவலகத்தில் திடிர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிவேலனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.