வலுவான கூட்டணியால் தமிழகத்தில் வரலாற்றில் இல்லாத வெற்றியை பா.ஜ.க., பெறும் : கோவை பா.ஜ.க. நிர்வாகிகளிடையே பிரதமர் மோடி நம்பிக்கை

கோவை : தமிழகத்தில் பா.ஜ.க., வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாகவும், வரலாற்றில் இல்லாத வெற்றியை இத்தேர்தலில் இக்கூட்டணி பெறும் என பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக தெரிவித்துள்ளார்.

கோவை : தமிழகத்தில் பா.ஜ.க., வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாகவும், வரலாற்றில் இல்லாத வெற்றியை இத்தேர்தலில் இக்கூட்டணி பெறும் என பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க தொண்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் பா.ஜ.க., தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து அருள்முருகன் என்ற பா.ஜ.க. தொண்டர் மோடியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மோடி, “பாகுபாடு இன்றி நாடு முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பா.ஜ.க., அளித்துள்ளது. பா.ஜ.க திட்டங்களினால் பயனடைந்த பொதுமக்கள் பா.ஜ.க.,விற்கு தேர்தலில் ஆதரவளிப்பார்கள். தமிழகத்தில் பா.ஜ.க., வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. வரலாற்றில் இல்லாத வெற்றியை இத்தேர்தலில் இக்கூட்டணி பெறும்.



கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.,விற்கு ஆதரவு பெருகி வருகிறது. கர்நாடகாவில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை. தென்னிந்தியாவில் அதிக இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெறும். மேலும், ஊடகங்களின் கருத்து கணிப்புகள் பொய்யாகும். மக்களின் கருத்து பா.ஜ.க.,விற்கு ஆதரவாக இருக்கும், என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...