திருப்பூர் : கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்களின் ஒருங்கிணைத்த முயற்சியால் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதாக எம்.எல்.ஏ., தனபால் தெரிவித்தார்.
திருப்பூர் : கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்களின் ஒருங்கிணைத்த முயற்சியால் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதாக எம்.எல்.ஏ., தனபால் தெரிவித்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டது தொடர்பாக எம்.எல்.ஏ., தனபால் பேசியதாவது :-இது, 60 ஆண்டுகால போராட்டமாகும். 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு முன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்னை அவிநாசி தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார். அப்போது, அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றுவதாகவும், இதனை மக்களிடம் உறுதியளிக்குமாறும் கூறினார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், உறுதியளித்தபடி, திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
தற்போது, இத்திட்டம் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டு, இதற்கென நியமிக்கப்பட்ட குழுவிடம் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த திட்டம் மொத்தம் ரூ.1,652 செலவில் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக, ரூ.1,000 கோடியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். கொங்கு மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிஜமாக்கிக் கொடுத்துள்ளார். கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்களின் ஒருங்கிணைத்த முயற்சியால் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக ரூ.60 கோடி செலவில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கவும் முதலமைச்சர் அனுமதி கொடுத்துள்ளார், எனக் கூறினார்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டது தொடர்பாக எம்.எல்.ஏ., தனபால் பேசியதாவது :-இது, 60 ஆண்டுகால போராட்டமாகும். 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு முன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்னை அவிநாசி தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார். அப்போது, அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றுவதாகவும், இதனை மக்களிடம் உறுதியளிக்குமாறும் கூறினார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், உறுதியளித்தபடி, திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
தற்போது, இத்திட்டம் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டு, இதற்கென நியமிக்கப்பட்ட குழுவிடம் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த திட்டம் மொத்தம் ரூ.1,652 செலவில் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக, ரூ.1,000 கோடியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். கொங்கு மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிஜமாக்கிக் கொடுத்துள்ளார். கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்களின் ஒருங்கிணைத்த முயற்சியால் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக ரூ.60 கோடி செலவில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கவும் முதலமைச்சர் அனுமதி கொடுத்துள்ளார், எனக் கூறினார்.