திருப்பூர் : விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனில் பிற தலைவர்களைக் காட்டிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனில் பிற தலைவர்களைக் காட்டிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 70 ஆண்டுகளாக கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பிப்ரவரி இறுதியில் தொடங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (பிப்.28) அவிநாசி - கோவை மெயின் ரோட்டில் உள்ள எம்.நாதம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி., வேலுமணி உள்பட பல்வேறு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- முதலமைச்சராக பதவியேற்றது முதல் எடப்பாடி பழனிசாமி, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவோடுதான் இருந்தார். ஆனால், போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, முதலமைச்சர் மாநில அரசின் நிதியை ஒதுக்கி, தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் எதிர்கட்சிகள் 5 முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தும், இத்திட்டத்தை நிறைவேற்றவில்லை.

பின்வாசலில் வந்து ஆட்சி செய்வதாக எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர். ஆனால், இங்கு யாரும் வாரிசு அரசியல் செய்யவில்லை. மேலும், முதலமைச்சர் பழனிசாமி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனில் பிற தலைவர்களைக் காட்டிலும், மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.
அதேவேளையில், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவதற்காக குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும், என்றார்.
கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 70 ஆண்டுகளாக கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பிப்ரவரி இறுதியில் தொடங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (பிப்.28) அவிநாசி - கோவை மெயின் ரோட்டில் உள்ள எம்.நாதம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி., வேலுமணி உள்பட பல்வேறு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- முதலமைச்சராக பதவியேற்றது முதல் எடப்பாடி பழனிசாமி, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவோடுதான் இருந்தார். ஆனால், போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, முதலமைச்சர் மாநில அரசின் நிதியை ஒதுக்கி, தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் எதிர்கட்சிகள் 5 முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தும், இத்திட்டத்தை நிறைவேற்றவில்லை.

பின்வாசலில் வந்து ஆட்சி செய்வதாக எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர். ஆனால், இங்கு யாரும் வாரிசு அரசியல் செய்யவில்லை. மேலும், முதலமைச்சர் பழனிசாமி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனில் பிற தலைவர்களைக் காட்டிலும், மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.
அதேவேளையில், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவதற்காக குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும், என்றார்.