கோவை உள்பட 3 மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். 



அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்பது கால்வாயிலிருந்து குழாய் மூலமாக பல்வேறு குளங்கள் மற்றும் குட்டைகளில் நீரை நிரப்பும் வகையில் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் திட்டம். இந்த திட்டத்திற்காக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக போராடியுள்ளனர். தொடர் போராட்டத்தின் விளைவாக, இத்திட்டம் கண்டிப்பாக கொண்டு வரப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார். அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது.



இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று (பிப்.28) அவிநாசி - கோவை மெயின் ரோட்டில் உள்ள எம்.நாதம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். தற்போது ரூ.1,532 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.



கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் சுமார் 60 ஆண்டு கனவு நிறைவேறியதை அடுத்து, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...