குடும்பத் தகராறு காரணமாக குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை : கோவையில் அதிர்ச்சி

கோவை : குடும்பத் தகராறு காரணமாக குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : குடும்பத் தகராறு காரணமாக குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காந்திபுரம் 6வது வீதியை சேர்ந்த ஜெகதீஷ் (36) மற்றும் க.க.சாவடி பகுதியைச் சேர்ந்த காஞ்சனா தேவி (30) ஆகியோருக்கு திருமணம் ஆகி சுமார் நான்கு ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு சாய் மகதி(3) என்ற மகள் உள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜெகதீஷ் சமீப காலமாக எந்த வேலைக்கும் செல்வதில்லை. 



காஞ்சனா தேவி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், காஞ்சனா தேவி நேற்று முன்தினம் இரவு, மகள் சாய் மகதியை அழைத்துக் கொண்டு, க.க.சாவடி அருகேயுள்ள மசகவுண்டன்பதியில் உள்ள தன் தாத்தாவுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள கிணறு அருகே தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு குழந்தையை கிணற்றில் வீசி விட்டு, காஞ்சனாவும் கிணற்றில் குதித்துள்ளார். இதில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.



இந்த நிலையில், தாயும், குழந்தையும் காணாமல் போனதாக கருதி உறவினர்கள் இருவரையும் தேடி வந்தனர். இதனிடையே, இந்த இருவரின் சடலம் காக்கா சாவடியில் கிணற்றில் கிடப்பது தெரியவந்தது. இத்கு குறித்து சம்பவம் அறிந்து வந்த க.க.சாவடி போலீசார், கிணற்றில் இருந்து இருவர்களது சடலத்தையும் மீட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்ததில் குடும்பத்தகராறு காரணமாகவே தற்கொலை செய்தது தெரியவந்தது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...