கோவையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட விவகாரம் : ஒருவார கால கெடுவுக்குள் விசாரணை முடிவு பெறும் என உறுதி

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, ஒரு வாரத்தில் விசாரணையை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, ஒரு வாரத்தில் விசாரணையை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.

கோவையில் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு சிகிச்சை பெற்ற குழந்தைக்கு இரத்தம் ஏற்றியதாகவும், அதில், எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக திருச்சியை சேர்ந்த குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

மேலும், இது தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் உறுப்பினர் மருத்துவர் ஆனந்த் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் உட்பட ஆணைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறியதாவது :-குழந்தைக்கு மூன்று அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டதில் எந்த இடத்தில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டது. எங்கெங்கு சிகிச்சை பெறப்பட்டது என விசாரிக்க உள்ளோம். 

ஒருவார காலக்கெடுவில் குழந்தையின் விவகாரம் தொடர்பாக விசாரணை முடிவுபெறும். இவ்விசாரணை குழுவில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்தும் உறுப்பினர்கள் வந்துள்ளனர். மேலும், நாங்கள் உண்மை கண்டறியும் குழுவாக இருந்து பணியாற்ற உள்ளோம். கோவை அரசு மருத்துவமனையில் முழு விசாரணை மேற்கொள்ளவுள்ளோம். 

குழந்தைகள் நலன் தேசத்தில் எங்கும் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்களது நோக்கம். விசாரணை முடிந்த பிறகு தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தில் விசாரணை அறிக்கையை சமர்பிக்க உள்ளோம், என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...