கோவை : முசோலினி, ஹிட்லர் போல கொஞ்சம் கொஞ்சமாக பிரதமர் மோடியும் பாசிஸ்டாகி வருவதாக கோவை மாநாட்டில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
கோவை : முசோலினி, ஹிட்லர் போல கொஞ்சம் கொஞ்சமாக பிரதமர் மோடியும் பாசிஸ்டாகி வருவதாக கோவை மாநாட்டில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

கோவை அரசியல் எழுச்சி மாநாட்டில் வைகோ பேசியதாவது:- ஒரு யுத்தம் மூண்டு விட்ட பிரம்மையை சித்தரித்து கொண்டிருக்கின்றன. எல்லையை காக்கும் இந்திய வீரர்களை எங்கள் மனதில் பூஜிக்கிறோம். நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தா, அனைவரும் பாதுகாக்க இருக்கிறோம். மோடி ஒரு பாசிஸ்ட் என குற்றம்சாட்டுகிறேன். அவரிடம் நேராகவே கேட்பேன். முசோலினி, ஹிட்லர் போல மோடி பேசுகிறார். கம்யூனிஸ்ட் வளர்ந்து வருவதை பொறுக்காமல் பெர்லின் நாடாளுமன்ற கட்டிடத்தை ஹிட்லரே எரித்து விட்டு கம்யூனிஸ்ட் மீது குற்றம்சாட்டினார். இதே போலவே, முசோலினியும் செய்தார். தான் நினைத்ததை சாதிக்க எதை வேண்டுமானாலும் செய்ய துணிபவர் தான் பாசிஸ். கொஞ்சம் கொஞ்சமாக பாசிஸ்டாகி வருகிறார் மோடி.

6 சர்வதேச விமானம் நிலையங்கள் அதானிக்கு 50 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படிபட்ட சூழலில் முல்லை பெரியார் அணையில், புதிய அணைகட்ட ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தது எங்களை அளிக்கவா..?. முதுகெலும்பற்ற, கொத்தடிமை வேலை பார்க்கும் அரசாக எடப்பாடி அரசு திகழ்கிறது, என்றார்.

கோவை அரசியல் எழுச்சி மாநாட்டில் வைகோ பேசியதாவது:- ஒரு யுத்தம் மூண்டு விட்ட பிரம்மையை சித்தரித்து கொண்டிருக்கின்றன. எல்லையை காக்கும் இந்திய வீரர்களை எங்கள் மனதில் பூஜிக்கிறோம். நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தா, அனைவரும் பாதுகாக்க இருக்கிறோம். மோடி ஒரு பாசிஸ்ட் என குற்றம்சாட்டுகிறேன். அவரிடம் நேராகவே கேட்பேன். முசோலினி, ஹிட்லர் போல மோடி பேசுகிறார். கம்யூனிஸ்ட் வளர்ந்து வருவதை பொறுக்காமல் பெர்லின் நாடாளுமன்ற கட்டிடத்தை ஹிட்லரே எரித்து விட்டு கம்யூனிஸ்ட் மீது குற்றம்சாட்டினார். இதே போலவே, முசோலினியும் செய்தார். தான் நினைத்ததை சாதிக்க எதை வேண்டுமானாலும் செய்ய துணிபவர் தான் பாசிஸ். கொஞ்சம் கொஞ்சமாக பாசிஸ்டாகி வருகிறார் மோடி.

6 சர்வதேச விமானம் நிலையங்கள் அதானிக்கு 50 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படிபட்ட சூழலில் முல்லை பெரியார் அணையில், புதிய அணைகட்ட ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தது எங்களை அளிக்கவா..?. முதுகெலும்பற்ற, கொத்தடிமை வேலை பார்க்கும் அரசாக எடப்பாடி அரசு திகழ்கிறது, என்றார்.