கோவை : முகிலனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் நடைபெறும் அனைத்துக் கட்சிகள் மாநாட்டில் நல்லக்கண்ணு வலியுறுத்தினார்.
கோவை : முகிலனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் நடைபெறும் அனைத்துக் கட்சிகள் மாநாட்டில் நல்லக்கண்ணு வலியுறுத்தினார்.
இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. . இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சி.பி.ஐ பொது செயலாளர் சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, சி.பி.ஐ.(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசியதாவது :- நாட்டின் சோதனையான நேரத்தில் இந்த அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகின்றது. பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள், நம் நாட்டின் 40 வீர்ர்களை கொலை செய்து இருக்கின்றனர். அனைத்து கட்சியினருக்கும் நாட்டை காப்பாற்றும் பணியில் உரிமை உண்டு.
சுதந்திரத்திற்கு எந்த முறையில் இடையூறு ஏற்பட்டாலும் அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும். வரக்கூடிய ஆட்சி சுதந்திரமான ஆட்சியாக, மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும். இந்திய நாட்டிற்கு யார் மூலம் ஆபத்து வந்தாலும் அதை எதிர்த்துப் போராட வேண்டும்.
குறிப்பாக, பேச்சுரிமை,எழுத்துரிமை போன்றவை பாதுகாக்க வேண்டும். தற்போது, தமிழகத்தில் வேதனையான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சாதி மோதல்கள் உருவாக்கப்படுகின்றது. தாதுமணல், கிரானைட், ஸ்டெர்லைட் போன்ற ஊழல்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. இதனால், மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.
தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றது. சகாயம் என்ற ஆட்சியர் 23 வருடங்களில் 24 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதனிடையே, சமூக ஆர்வலர் முகிலனை காணவில்லை. பொது மக்களுக்காகப் போராடினார். இந்நிலையில், தற்போது, எங்கு இருக்கின்றார் என தகவல் தெரியவில்லை. அரசு இதில் மௌனம் சாதிக்கின்றது. முகிலன் உயிரோடு இருக்கின்றாரா என தெரிய வேண்டும்.
இதற்காக, வரும் மாதம் 2ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். முகிலன் சாதாரண மனிதர் அல்ல. மக்களுக்காக போராடியதற்காக, அவர் மீது 100 வழக்குகள் இருக்கின்றது . முகிலனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.