நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 17ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கும் என தோட்டக்கலை துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்தார்.
நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 17ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கும் என தோட்டக்கலை துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்தார்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க, ஆண்டுதோறும் 33 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் நாடாளுமன்றம் தேர்தல் நடைபெற இருப்பதால், மே மாதம் நடைபெறும் மலர்க்கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி ஆகிய இரு கண்காட்சிகள் தேதி மட்டும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, உதகை தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலும் நடைபெறும். மேலும், மே 25, 26 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது பழக்கண்காட்சி நடத்தப்படும். ரோஜா, காய்கறி போன்ற கண்காட்சி தேதிகள் தேர்தல் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும், என தோட்டக்கலை துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்தார்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க, ஆண்டுதோறும் 33 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் நாடாளுமன்றம் தேர்தல் நடைபெற இருப்பதால், மே மாதம் நடைபெறும் மலர்க்கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி ஆகிய இரு கண்காட்சிகள் தேதி மட்டும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, உதகை தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலும் நடைபெறும். மேலும், மே 25, 26 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது பழக்கண்காட்சி நடத்தப்படும். ரோஜா, காய்கறி போன்ற கண்காட்சி தேதிகள் தேர்தல் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும், என தோட்டக்கலை துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்தார்.