புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க பி.எஸ்.ஜி கல்லூரி சார்பில் ரூ.33.65 லட்சம் மானியம் : 5 புதிய பயனாளிகள் பெற்றுக் கொண்டனர்

கோவை : நிதி பிரியாஸ் மற்றும் நிதி இஐஆர் திட்டத்தில் கீழ், பயனாளிகளுக்கு ரூ.33.65 லட்சம் மதிப்பில் மானியம் பெற அனுமதியளிக்கும் முதல் தவணை வெளியீடு 5 புதிய பயனாளிகளுக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது.

கோவை : நிதி பிரியாஸ் மற்றும் நிதி இஐஆர் திட்டத்தில் கீழ், பயனாளிகளுக்கு ரூ.33.65 லட்சம் மதிப்பில் மானியம் பெற அனுமதியளிக்கும் முதல் தவணை வெளியீடு 5 புதிய பயனாளிகளுக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது. 

மேலாண்மை மற்றும் ஊக்குவிக்கும் தேசிய இன்னோவேஷனல் முனைப்பு (நிதி- NIDHI) திட்டம், அறிவியல் சாந்த தொழில்நுட்பத்தை மற்றும் ஆதாரமான கருத்துக்களை ஊக்குவிக்கும், உருவாக்கும் ஒரு திட்டம் ஆகும். 



இளம் தலைமுறையினரிடையே, புதுமையான திட்டங்களின் ஆரம்ப கட்ட யோசனை மற்றும் கருத்து ஆகியவை நிதியின் பொருட்டு, ஒரு இடைவெளியை பெறுகிறது. இளம் கண்டுபிடிப்பாளர்கள் இடையே அந்த குறையை போக்கும் வகையில், நிதியை ஊக்குவித்தல் இந்த திட்டத்தின் அடிப்படையாகும். 

இந்த திட்டம் தோல்வி பற்றி கவலைப்படாமல் தங்கள் எண்ணங்களை முயற்சி செய்ய முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் இளைஞர்களை ஈர்க்கும். புதிய கண்டுபிடிப்பாளருக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி வழங்கும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 12 மாத காலத் திட்டமான இதில், ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.30,000 ஆயிரம் வரை வழங்கப்படும். 



பிஎஸ்ஜி - பிரியாஸ்-யின் கீழ் நிதி ஆதரவு கோரி மின் மற்றும் மின்னணு, பயோ-மருத்துவம், பயோடெக்னாலஜி, ஜவுளி, மற்றும் எந்திரவியல் போன்ற பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து புதுமையான யோசனைகளைப் பெறப்பட்டு, அதன் பின் அதனைத் திட்ட நிபுணர்களால் மதிப்பீடு செய்து, அதன் பின்னரே மானியம் வழங்கப் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

முன்னதாக, 2017ம் ஆண்டு ஜூலை 13 ம் தேதியன்று, ரூ.71 லட்சம், 10 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதை போலவே, 2018ம் ஆண்டு இரண்டாம் கட்டமாக, ரூ.25.76 லட்சம் 3 கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்பட்டது. 3ம் முறையாக பிப்., 2019ம் ஆண்டு ரூ.33.65 லட்சம், 5 கண்டுபிடிப்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 



இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்கள், 

1). டாக்டர்.முத்துக்குமார் அமிர்தலிங்கம் - நானோ தொழில்நுட்பம் - நானோ மருத்துவம் பிரிவு, மானியம் ரூ.9.70 லட்சம் 

2). டாக்டர். கிறிஸ்டோபர் -உயிரியல் தொழில்நுட்பம் - ஹெல்த் கேர் பிரிவு , மானியம் ரூ.9.35 லட்சம் 

3). சந்தோஷ் - பொறியியல் - விவசாயம் பிரிவு, மானியம் ரூ.5 லட்சம் 

4). அகமது முக்தர் - பொறியியல் - ஆட்டோமேசன் பிரிவு, ரூ.9.60 லட்சம் 

5). ராம் பிரசாத் - பொறியியல் மற்றும் தயாரித்தல் பிரிவு, மானியம் ரூ.30 ஆயிரம் (1 மாதம்). 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...