இருநாடுகளுக்கிடையே போர் மூழும் சூழலைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : கோவையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு

கோவை : இரு நாடுகளுக்கிடையே போர் மூழும் சூழலைத் தவிர்ப்பதற்கும், தடுப்பதற்கும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.



கோவை : இரு நாடுகளுக்கிடையே போர் மூழும் சூழலைத் தவிர்ப்பதற்கும், தடுப்பதற்கும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். 

இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடக்கிறது. இதில், பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். 



அவர் கூறியதாவது ;- புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய விமானப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதன் மூலம் பயங்கரவாதிகளில் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என ஆறுதல் அளித்தாலும், இரு நாடுகளுக்கிடையே போர் மூழும் அபாயம் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. எனவே, இரு நாடுகளுக்கிடையேயான போராக இது மாறக்கூடாது. போர் முழு சூழலைத் தவிர்ப்பதற்கும், தடுப்பதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார். 

மேலும், கூட்டணி குறித்த கேள்விக்கு, "திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. உரிய நேரத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் தொய்வு ஏதுமில்லை. பேச்சுவார்த்தை முடிவுக்கு பின்னர், இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேன்", என பதிலளித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...