திருப்பூரில் அதிகாலையில் மது விற்கும் டாஸ்மாக் கடையைக் கண்டித்து கையில் கத்தியுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்

திருப்பூர் : அதிகாலை முதலே மது விற்பனை நடைபெறுவதைக் கண்டித்து, கையில் கத்தியுடன் டாஸ்மாக் கடை முன் பெண் தர்ணா மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டார்.


திருப்பூர் : அதிகாலை முதலே மது விற்பனை நடைபெறுவதைக் கண்டித்து, கையில் கத்தியுடன் டாஸ்மாக் கடை முன் பெண் தர்ணா மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டார். 



திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் 2310 எண் கொண்ட டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இதற்கு முன்பாக, காலை 5 மணி முதலே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், தனது கணவர் தினமும் குடித்து விட்டு பணிக்கு செல்லவில்லை எனவும், பனியன் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றும் எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடுகிறது எனவும் கூறுகிறார் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கவிதா. 

இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ஆத்திரமடைந்த கவிதா இன்று கையில் கத்தி மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் டாஸ்மாக் கடைமுன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதையடுத்து, சாலைமறியலிலும் ஈடுபட்டார். இந்நிலையில், டாஸ்மாக் கடை முன்பாக பெண் ஒருவர் கத்தியுடன் அமர்ந்து போராடுகிறார் என பரவிய தகவலால், அவரை காண ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். 

இதையடுத்து, தகவலறிந்து திருமுருகன் பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மது விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அங்கு விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு பெட்டி மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், கவிதாவை விசாரணைக்குக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...