கோவை மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை : காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


கோவை : காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

கோவை 100 அடி சாலையில் உள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நகைக்கடையில், வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், மூன்று வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தனித்தனியாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நகைக்கடையின் நான்கு தளங்களில் சோதனை ஆரம்பமானது. 

இந்நிறுவனம் சார்பில், கடந்த வருடம் வரி ஏய்ப்பு நடந்ததாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்ததுள்ளது, இதை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இந்த நூறு அடி சாலையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நகைக்கடை கிளை திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சோதனையின் முடிவில் அந்நிறுவனம் சார்பில் வரி ஏய்ப்பின் மதிப்பு குறித்து விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாலை முதல் நடைபெற்று வரும் சோதனையின் காரணமாக, வாடிக்கையாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், நகைக்கடையின் முன்புறம் உள்ள சட்டரின் கதவு பாதி அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஊழியர்கள் இன்று யாரும் வேலைக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...