தமிழகத்தில் 12 மாநகராட்சிகளிலும் பன்முக கால்நடை மருத்துவமனை விரிவாக்கம் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

திருப்பூர் : தமிழகத்தில் 6 மாநகராட்சிகளில் மட்டுமே செயல்பட்டு வந்த பன்முக கால்நடை மருத்துவமனை, 12 மாநகராட்சிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : தமிழகத்தில் 6 மாநகராட்சிகளில் மட்டுமே செயல்பட்டு வந்த பன்முக கால்நடை மருத்துவமனை, 12 மாநகராட்சிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாநகராட்சியில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனை 24 மணி நேரமாக செயல்படக்கூடிய கால்நடை பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- 6 மாநகராட்சிகளில் செயல்பட்டு வந்த கால்நடை பன்முக மருத்துவமனை திருப்பூர் உட்பட 12 மாநகராட்சிகளிலும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக பணியாற்ற சுழற்சி அடிப்படையில் 4 மருத்துவர்கள் பணிபுரிவார்கள். மேலும், அல்ட்ரா ஸ்கேன், டிஜிட்டல் ஸ்கேனர் வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 



கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் பிரிக்கப்பட்டதிலிருந்து கட்டிட வரைபடத்திற்கு அனுமதி பெற கோவை அல்லது சேலத்திலிருந்த நகரமைப்பு அலுவலகத்தை அணுக வேண்டிய நிலையினை மாற்றி, தற்போது திருப்பூரிலேயே அனுமதி பெறக்கூடிய வகையில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அரசியல் கூட்டணி குறித்தெல்லாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்வார்கள், என்றார். 



இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா, மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...