'பந்திப்பூர் காட்டுத்தீயில் கருகிய விலங்குகள்' என சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள் போலி : கர்நாடகா வனத்துறை

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பந்திப்பூர் தேசியப் பூங்கா பகுதியில், ஏற்பட்ட தீ விபத்தில் கருகியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல, என கர்நாடகா வனத்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பந்திப்பூர் தேசியப் பூங்கா பகுதியில், ஏற்பட்ட தீ விபத்தில் கருகியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல, என கர்நாடகா வனத்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. 



அந்த ட்வீட் குறிப்பில் கூறியிருப்பதாவது :- தீத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் சமயத்தில், நாங்கள் எந்த இறந்த உயிரினங்களையும் கடந்து வரவில்லை. 



ஆனால், சமூக வலைதளங்களில், செய்திகளில் வெளிவரும் புகைப்படங்கள் உண்மைக்கு அப்பால் உள்ளது., எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து சூழலியளார்கள் கூறும் போது, வனத்துறையின் தரப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். 



"கருகிய நிலையில், முயல்கள், மான்களுடன் இருக்கும் உராங்குட்டான் புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன. இந்தியா முழுக்கவும் உராங்குட்டான் ஒன்று கூட இல்லையெனும் போது, அந்த புகைப்படத்தில் மட்டும் எப்படி வந்தது. அது நிச்சயமாக வெளிநாடுகளில் உள்ள காடுகள் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுத்தவையாக இருக்கக்கூடும். 



வனத்துறையினர் பந்திப்பூர் வனப்பகுதியில் பரவி எரிந்து கொண்டிருக்கும் தீயை, முதுமலை வனப்பகுதிக்குள் வராமல் தடுத்துக் கொண்டிருக்கின்றனர். முழுமையாக, தீயணைப்பு பணிகள் நிறைவடைந்த பின் தான் எத்தனை வன உயிரிகளின் உயிர் சேதமடைந்துள்ளது என கணக்கிட முடியும். இந்நிலையில், இது போன்ற தவறான தரவுகளுடைய புகைப்படங்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்கிறார், சூழலியலார் ஒருவர். 



மேலும், கடந்த 5 நாட்களாக பெரியளவில் நடந்த இந்த காட்டுத் தீ விபத்தில், பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வனச்சரணாலயத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தீயணைப்பு பணியில் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என பல்வேறு அமைப்புகளில் உள்ளோரும் திரண்டு செயல்பட்டு வருகின்றனர். 



இந்நிலையில், இந்த தீ முதுமலை வனப்பகுதியிலும் பரவி சேதம் விளைவித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே, கேரள வனத்துறையினரும் எல்லையில் உள்ள வனப்பகுதியில், காட்டுத்தீயைத் தடுக்க பாதுகாப்பைப் பலப்படுத்திக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...