கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

கோவை: கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரெயின்போ பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பது இல்லை எனக்கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரெயின்போ பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பது இல்லை எனக்கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ரெயின்போ பேருந்து நிறுத்தத்தை சுற்றி ஹைவேஸ் காலணி, கிழக்கு கிளப் சாலை பகுதி, உள்ளிட்ட பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் ரெயின்போ பேருந்து நிலையத்திற்கு அடுத்துள்ள அரசு மருத்துவமனை, சுங்கம் பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. இதனால் வயதானவர்கள், பெண்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் 2 கீ.லோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.



இதனை கண்டித்து இப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். ரேஸ்கோஸ் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மக்களை சமரசம் செய்தனர். இதனை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...