ஸ்டாலின் தலைமை பொறுப்பேற்கத் தகுதியற்றவர் : திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்

திருப்பூர் : ஸ்டாலின் தளபதியாக இருப்பதற்கு தகுதியானவரே தவிர, தலைமை பொறுப்பேற்கத் தமிழகத்திலே தகுதியற்றவர் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திருப்பூரில் பேசியுள்ளார்.

திருப்பூர் : ஸ்டாலின் தளபதியாக இருப்பதற்கு தகுதியானவரே தவிர, தலைமை பொறுப்பேற்கத் தமிழகத்திலே தகுதியற்றவர் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திருப்பூரில் பேசியுள்ளார். 



திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில், முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 7,100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது ;- ஸ்டாலின் சொல்வதைக் கேட்கும் போது எனக்கு வியப்பாக இருக்கிறது. திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆகவே, இங்கு துறைமுகத்தை விரிவுபடுத்தப்போகிறேன் என ஸ்டாலின் பேசி இருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது. 400 கிலோமீட்டருக்கு அப்பால் கடல் உள்ள நிலையில், திருப்பூரில் உள்ளவர்களுக்குத் துறைமுகத்தை விரிவுபடுத்தப்போகிறேன் என்கிறார். இதிலிருந்தே, அவர் தளபதியாக இருக்கத் தகுதியானவரே தவிர, தமிழகத்தில் தலைமை பொறுப்பேற்க அல்ல எனத் தெரிகிறது. மேலும், 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும், இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...