பெண்கள், குழந்தைகளுக்கான அனைத்து விடுதிகளும் பதிவு செய்ய கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவு

கோவை : தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படி சட்டம் 2014-ன்படி அனைத்து விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அறிவித்துள்ளார்.

கோவை : தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படி சட்டம் 2014-ன்படி அனைத்து விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், தனியார் மற்றும் மத அமைப்புகள் நடத்தும் வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண்கள், பெண் குழந்தைகள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகிய இல்லவகைகள் எதுவாகிலும், அதனை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்தும் சட்டம் 2014-ன்படி பதிவு செய்ய வேண்டும். 

மேலும், பதிவு செய்யாதவர்களுக்கு மேற்குறிப்பிட்ட சட்டத்தின்படி, 2 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ. 50,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படும் என்பதால், குழந்தைகள் மற்றும் மகளிருக்கான விடுதிகளை நடத்தும் அனைவரும் கட்டாயமாக விடுதல் இன்றி 28-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யாமல் நடத்தப்படும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆய்வுக்குழுவினரால் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதல் விபரங்களுக்கு Coimbatore.nic. என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...