நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் காட்டுத் தீயில் இருந்து பத்திரமாக காப்பாற்றப்பட்ட மலைப்பாம்பு, பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்டது.
நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் காட்டுத் தீயில் இருந்து பத்திரமாக காப்பாற்றப்பட்ட மலைப்பாம்பு, பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட வனப்பகுதியான மன்றாடியார் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட காட்டுத்தீ, தொடர்ந்து எரிந்து வருகிறது. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான வனத்துறை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. நூற்றுக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் உள்ள புல்வெளிகள், செடிகள் எரிந்து சாம்பலாகின. இந்தக் காட்டுத் தீயில் ஊர்வன உள்ளிட்ட பல்வேறு நுண்ணுயிர்கள் அழிந்து போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. யானை உள்ளிட்ட பெரிய உயிரினங்கள் காட்டுத்தீ இருந்து தப்பித்து பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள், கண்களில் மலைப்பாம்பு ஒன்று காட்டுத் தீயில் இருந்து தப்பித்து மயங்கி கிடப்பதை பார்த்து உள்ளனர். இதனை அடுத்து, சுமார் 15 அடி நீளமுள்ள அந்த மலைப் பாம்பை அங்கிருந்து அகற்றி, அதன் மீது தண்ணீர் ஊற்றி வெப்பத்தால் தவித்த பாம்பை பாதுகாத்து உள்ளனர். பின்னர், வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, மலைப்பாம்பு, காட்டுத்தீ ஏற்படாத பாதுகாப்பான மாயாற்றை ஒட்டிய பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட வனப்பகுதியான மன்றாடியார் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட காட்டுத்தீ, தொடர்ந்து எரிந்து வருகிறது. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான வனத்துறை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. நூற்றுக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் உள்ள புல்வெளிகள், செடிகள் எரிந்து சாம்பலாகின. இந்தக் காட்டுத் தீயில் ஊர்வன உள்ளிட்ட பல்வேறு நுண்ணுயிர்கள் அழிந்து போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. யானை உள்ளிட்ட பெரிய உயிரினங்கள் காட்டுத்தீ இருந்து தப்பித்து பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள், கண்களில் மலைப்பாம்பு ஒன்று காட்டுத் தீயில் இருந்து தப்பித்து மயங்கி கிடப்பதை பார்த்து உள்ளனர். இதனை அடுத்து, சுமார் 15 அடி நீளமுள்ள அந்த மலைப் பாம்பை அங்கிருந்து அகற்றி, அதன் மீது தண்ணீர் ஊற்றி வெப்பத்தால் தவித்த பாம்பை பாதுகாத்து உள்ளனர். பின்னர், வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, மலைப்பாம்பு, காட்டுத்தீ ஏற்படாத பாதுகாப்பான மாயாற்றை ஒட்டிய பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.