கோவை : கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
கோவை : கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் கடந்த இரு தினங்களாக காட்டுத் தீ பரவி வருகிறது. குறிப்பாக, மருதமலை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, மதுக்கரை வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனை பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வனத்துறையினர் அணைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆனைக்கட்டி வனப்பகுதியில் இன்று மதியம் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சென்ற வனத்துறை ஊழியர்கள், உள்ளூர் மக்களின் உதவியுடன், தீ பிற பகுதிகளுக்கு பரவாதவாறு கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
இதனிடையே, கோவை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் மதுக்கரை வனக்கோட்டப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.