கோவை : வடவள்ளி அருகே டாஸ்மார்க் கடை மூடிய நிலையில், மதுவை அதிக விலைக்கு விற்றதால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பார் உரிமையாளரை இளைஞர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : வடவள்ளி அருகே டாஸ்மார்க் கடை மூடிய நிலையில், மதுவை அதிக விலைக்கு விற்றதால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பார் உரிமையாளரை இளைஞர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு அடைக்கப்படுகிறது. ஆனால், கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இங்கு மது விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதேபோல, மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை என அறிவித்திருந்தாலும், சாதாரண நாட்களில் அதிகபட்சமாக விற்பதைவிட இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறது. இது மது பிரியர்கள் மத்தியில் பார் உரிமையாளர்கள் மேல் கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவங்களால் ஆங்காங்கே பிரச்சனைகள் மூண்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று இரவு மதுக்கடைகள் வழக்கம்போல, 10 மணிக்கு மூடப்பட்டுவிட்டது. பின்னர், 10.30 மணியளவில் வடவள்ளி சிறுவாணி மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக்கிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் பார் உரிமையாளர் பழம்பதியிடம் மது கேட்டுள்ளனர். அப்போது, பார் உரிமையாளர் பழம்பதி அதிக விலைக்கு மதுவை விற்பனை செய்துள்ளார். இதனால், வாலிபர்களுக்கும், பார் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
ஒருகட்டத்தில் பாரில் வேலை செய்யும் ஊழியர்கள் வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை தாக்கி, அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பறித்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அந்த இரு இளைஞர்கள் தங்களது நண்பர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பார் உரிமையாளர் பழம்பதி மகாராணி அவென்யூ சந்திப்பு அருகே வந்தபோது, அந்த இளைஞர்களின் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆத்திரமடைந்த இளைஞரின் நண்பர்கள் பழம்பதியை அரிவாளால் வெட்டினர். இதையடுத்து, சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வருவதைக் கண்டு அனைவரும் தப்பித்து ஓடினர். மேலும், பலத்த காயமடைந்த பார் உரிமையாளர் பழம்பதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பார் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை வடவள்ளி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு அடைக்கப்படுகிறது. ஆனால், கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இங்கு மது விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதேபோல, மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை என அறிவித்திருந்தாலும், சாதாரண நாட்களில் அதிகபட்சமாக விற்பதைவிட இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறது. இது மது பிரியர்கள் மத்தியில் பார் உரிமையாளர்கள் மேல் கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவங்களால் ஆங்காங்கே பிரச்சனைகள் மூண்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று இரவு மதுக்கடைகள் வழக்கம்போல, 10 மணிக்கு மூடப்பட்டுவிட்டது. பின்னர், 10.30 மணியளவில் வடவள்ளி சிறுவாணி மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக்கிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் பார் உரிமையாளர் பழம்பதியிடம் மது கேட்டுள்ளனர். அப்போது, பார் உரிமையாளர் பழம்பதி அதிக விலைக்கு மதுவை விற்பனை செய்துள்ளார். இதனால், வாலிபர்களுக்கும், பார் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
ஒருகட்டத்தில் பாரில் வேலை செய்யும் ஊழியர்கள் வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை தாக்கி, அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பறித்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அந்த இரு இளைஞர்கள் தங்களது நண்பர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பார் உரிமையாளர் பழம்பதி மகாராணி அவென்யூ சந்திப்பு அருகே வந்தபோது, அந்த இளைஞர்களின் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆத்திரமடைந்த இளைஞரின் நண்பர்கள் பழம்பதியை அரிவாளால் வெட்டினர். இதையடுத்து, சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வருவதைக் கண்டு அனைவரும் தப்பித்து ஓடினர். மேலும், பலத்த காயமடைந்த பார் உரிமையாளர் பழம்பதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பார் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை வடவள்ளி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.