நவீனப்படுத்தப்படும் பாரம்பரிய நீலகிரி மலை ரயில் : பயணிகளின் வசதிக்காக ஐ.சி.எப்., அதிநவீன ரயில் பெட்டிகள் அறிமுகம்

நீலகிரி : பாரம்பரிய நீலகிரி மலை ரயிலில் பயன்படுத்தப்பட்டு வந்த 40 ஆண்டுகள் பழமையான பெட்டிகளுக்கு பதிலாக, பயணிகளின் வசதிக்காக ஐ.சி.எப்., அதிநவீன ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுகிறது.

நீலகிரி : பாரம்பரிய நீலகிரி மலை ரயிலில் பயன்படுத்தப்பட்டு வந்த 40 ஆண்டுகள் பழமையான பெட்டிகளுக்கு பதிலாக, பயணிகளின் வசதிக்காக ஐ.சி.எப்., அதிநவீன ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுகிறது.



யுனெஸ்கோ நிறுவனத்தினால் பாரம்பரிய ரயில் பாதையாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை ரயில், இந்திய ரயில்வேயின் மிகப்பழமையான ரயில் சேவைகளில் ஒன்றாகும். 1899-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட நீலகிரி மலை ரயில் சேவை, இந்தியாவின் மலை ரயில் சேவைகளில் மிகவும் புகழ் பெற்றதாகும். தற்போது, நீலகிரி மலை ரயில் சேவையில் உள்ள ரயில் பெட்டிகள் சுமார் 40 ஆண்டுகள் பழமையானவையாகும். இவை அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, பயணிகளின் பயன்பாட்டிற்கு விடப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஐ.சி.எப். ரயில் பெட்டித் தொழிற்சாலை, முதன்முறையாக நீலகிரி மலை ரயில் சேவைக்கு அதிநவீன ஸ்டீல் ரயில்பெட்டிகளை தயாரித்து அனுப்பி உள்ளது. மொத்தம் 15 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு, தற்போது முதல் தவணையாக ஒரு முதல் வகுப்பு, இரண்டு 2-ம் வகுப்பு, ஒரு லக்கேஜ் மற்றும் பயணிகள் ரயில் பெட்டிகள் கொண்ட 4 ரயில் பெட்டிகள் கொண்ட ரயில் தொடர், தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை ரயில் பாதை வழியாக மேட்டுப்பாளையம் சென்றடைந்து, நீலகிரி மலை ரயில் சேவையில் பயன்படுத்தப்படும். மீதம் உள்ள 11 ரயில் பெட்டிகளும் விரைவில் தயாரித்து அனுப்பப்படும். 



முதல் வகுப்பு பெட்டியில் 32 பயணிகளும், இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 44 பேர் வீதம் 88 பயணிகளும், லக்கேஜ் ரயில் பெட்டியில் 26 பயணிகளும் என ஆக மொத்தம் 146 பயணிகள் இந்த ரயில் தொடரில் அமர்ந்து பயணிக்கலாம். 



இந்த புதிய வகை ரயில் பெட்டிகளின் சிறப்பம்சங்கள் :-

• ஸ்டெயின்லஸ் ஸ்டீல் ரயில்பெட்டிகள் 

• முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு லக்கேஜ் ரயில் பெட்டி என மூன்று வகை ரயில்பெட்டிகள் 

• சுற்றுலாப் பயணிகள் உள்ளே அமர்ந்து வெளிப்புற இயற்கை காட்சிகளை முழுமையாகக் கண்டு ரசிக்க பெரிய கண்ணாடிகள் கொண்ட சன்னல்கள்

• செங்குத்தான மலைப்பாதையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாக பயணிக்க ரேக் பினியன் கொண்ட மீட்டர் கேஜ் ரயில்பெட்டிகள்

• முதல் வகுப்புப் பெட்டியில் 32 பயணிகளும், இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 44 பேர் வீதம் 88 பயணிகளும், லக்கேஜ் ரயில் பெட்டியில் 26 பயணிகளும் என ஆக மொத்தம் 146 பயணிகள் பயணிக்க அமரும் வகையில் இருக்கை வசதி. 

• மாற்றுத்திறனாளிகள் நேரடியாக ரயில் பெட்டியில் உள்ளே செல்ல இரண்டாம் வகுப்பு லக்கேஜ் ரயில் பெட்டியில் அகலமான கதவு மற்றும் சக்கர நாற்காலியை நிறுத்தும் வசதி. 

• வசதியாக பயணிக்க குஷன் இருக்கைகள்

• எல்.ஈ.டி., விளக்குகள்

• பிரேக் மேன் தனியாக அமர்ந்து பிரேக் இயக்க வசதி

• ஒவ்வொரு பெட்டியிலும், எஞ்சின் டிரைவர், கார்டு மற்றும் பிரேக் மேன் மூவரும் பேசிக் கொள்ள வசதியாக மைக் மற்றும் ஸ்பீக்கர் வசதி.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...