கோவையில் ஓய்வு பெற்ற காவலர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் கொலை செய்ததாக மகன் வாக்குமூலம்

கோவை : இருகூர் அருகே ஓய்வுபெற்ற காவலரை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில், மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.


கோவை : இருகூர் அருகே ஓய்வுபெற்ற காவலரை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில், மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இருகூர் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (70). இவரது மகன் செந்தில் குமார் (40). சுப்பிரமணியம் கடந்த 2006-ம் ஆண்டு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அவரது மகன் செந்தில்குமாருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால், செந்தில்குமார் தன் பெற்றோருடன் வசித்து வந்தார். 

மேலும், செந்தில்குமார் வீட்டிற்கு மதுபோதையில் தினம் வருவதால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மகன் செந்தில்குமார், தந்தை சுப்பிரமணியத்தை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார், கொலையாளி செந்தில்குமாரை கைது செய்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில், மது குடிப்பதற்காக செந்தில்குமார் தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் தராமல், எந்த வேலைக்கும் செல்லாமல் இவ்வாறு ஊதாரியாக சுற்றுகிறாயே என கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது தந்தையை நெஞ்சு இடுப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக கத்தியில் குத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஓய்வு பெற்ற காவலரின் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...