கோவை : பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இணைய விரும்பும் கோவை மாவட்ட விவசாயிகள், 25-ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.
கோவை : பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இணைய விரும்பும் கோவை மாவட்ட விவசாயிகள், 25-ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் நோக்கில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிதியானது, நான்கு மாதங்களுக்கு ஒரு முறையென மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இதுவரையில் சுமார் 69,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில், தகுதியான 36,016 விவசாயிகளின் மனுக்கள் ஏற்கப்பட்டு, இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, முதல் தவணையாக ரூ. 2,000 இணைக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் இணைய விரும்பும், 5 ஏக்கருக்குள் நிலம் கொண்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் 25-ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, சிட்டா, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு ஆவணங்களை அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்து, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் என கோவை மாவட்ட வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் நோக்கில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிதியானது, நான்கு மாதங்களுக்கு ஒரு முறையென மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இதுவரையில் சுமார் 69,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில், தகுதியான 36,016 விவசாயிகளின் மனுக்கள் ஏற்கப்பட்டு, இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, முதல் தவணையாக ரூ. 2,000 இணைக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் இணைய விரும்பும், 5 ஏக்கருக்குள் நிலம் கொண்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் 25-ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, சிட்டா, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு ஆவணங்களை அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்து, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் என கோவை மாவட்ட வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.