திருப்பூர் : காசிலிங்கம்பாளையம் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வரும் முட்டை கோழிப்பண்ணை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் : காசிலிங்கம்பாளையம் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வரும் முட்டை கோழிப்பண்ணை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அடுத்த காசிலிங்கம்பாளையம் பகுதியில் தனியார் முட்டை கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில், சுகாதாரப் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால், கோழி கழிவுகளின் மூலமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதனால், கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, ஈ தொல்லையும் அதிக அளவில் உள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள வீடுகளில் குழந்தைகளுடன் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வரும் முட்டை கோழிப்பண்ணை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அடுத்த காசிலிங்கம்பாளையம் பகுதியில் தனியார் முட்டை கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில், சுகாதாரப் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால், கோழி கழிவுகளின் மூலமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதனால், கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, ஈ தொல்லையும் அதிக அளவில் உள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள வீடுகளில் குழந்தைகளுடன் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வரும் முட்டை கோழிப்பண்ணை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.