கோவை : கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்த பெண் காவலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்த சக காவலர்கள், வாட்ஸ் ஆப்பில் குழு அமைத்து நிதி திரட்டி உதவிய சம்பவம் அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
கோவை : கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்த பெண் காவலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்த சக காவலர்கள், வாட்ஸ் ஆப்பில் குழு அமைத்து நிதி திரட்டி உதவிய சம்பவம் அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

கடந்த 1997-ஆம் ஆண்டு கோவை மாநகர காவல்துறையில் பணியில் சேர்ந்தவர் வனிதா. இவர் தற்பொழுது சேலம் மாவட்டத்தில் பெண் தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட காவலருக்கு உதவும் விதமாக, கோவை மாநகர காவல்துறையில் 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தலைமை காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, "1997 பேட்ச் வாட்ஸ் ஆப்" குழுவை உருவாக்கினர்.

இதன் மூலம், அனைவரும் இணைந்து காவலர் வனிதாவின் மருத்துவ சிகிச்சைக்காக உதவி செய்ய தானாக முன்வந்து நன்கொடைகளை அளித்தனர். மொத்தம் ரூ. 2,00,000 பணம் திரட்டப்பட்டது. இந்த பணத்தை காவலர் வனிதாவை சந்தித்து கொடுக்க, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண், வாகன வசதியை செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர்கள் காவலர் வனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று, திரட்டப்பட்ட பணத்தை நேரில் வழங்கினர்.

கடந்த 1997-ஆம் ஆண்டு கோவை மாநகர காவல்துறையில் பணியில் சேர்ந்தவர் வனிதா. இவர் தற்பொழுது சேலம் மாவட்டத்தில் பெண் தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட காவலருக்கு உதவும் விதமாக, கோவை மாநகர காவல்துறையில் 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தலைமை காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, "1997 பேட்ச் வாட்ஸ் ஆப்" குழுவை உருவாக்கினர்.

இதன் மூலம், அனைவரும் இணைந்து காவலர் வனிதாவின் மருத்துவ சிகிச்சைக்காக உதவி செய்ய தானாக முன்வந்து நன்கொடைகளை அளித்தனர். மொத்தம் ரூ. 2,00,000 பணம் திரட்டப்பட்டது. இந்த பணத்தை காவலர் வனிதாவை சந்தித்து கொடுக்க, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண், வாகன வசதியை செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர்கள் காவலர் வனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று, திரட்டப்பட்ட பணத்தை நேரில் வழங்கினர்.