கோவை : கோவையில் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வந்தவர் சாணி பவுடரை அருந்தி, நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : கோவையில் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வந்தவர் சாணி பவுடரை அருந்தி, நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்காகத் தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சேலம் கன்னக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டுரங்கன் (44), மற்றும் இவரது மனைவி கவிதா ஆகியோருக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக, குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 9 ஆண்டுகாலமாக நடந்து வந்ததால், பாண்டுரங்கன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, இன்று வழக்கு விசாரணைக்காக குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வந்தவர், நீதிபதியிடம் வழக்கை விரைந்து முடித்துக் கொடுக்க வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, நீதிமன்ற வளாகத்தில் சாணி பவுடரை அருந்தி, பாண்டுரங்கன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்காகத் தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சேலம் கன்னக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டுரங்கன் (44), மற்றும் இவரது மனைவி கவிதா ஆகியோருக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக, குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 9 ஆண்டுகாலமாக நடந்து வந்ததால், பாண்டுரங்கன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, இன்று வழக்கு விசாரணைக்காக குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வந்தவர், நீதிபதியிடம் வழக்கை விரைந்து முடித்துக் கொடுக்க வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, நீதிமன்ற வளாகத்தில் சாணி பவுடரை அருந்தி, பாண்டுரங்கன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.