கோவை : மத்திய அரசு வழங்கியுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகையின் முதல் தவணையான ரூ. 2,000-த்தை குளம் தூர்வாரும் பணிக்கு கோவையைச் சேர்ந்த விவசாயி வழங்கிய நிகழ்வு அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மத்திய அரசு வழங்கியுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகையின் முதல் தவணையான ரூ. 2,000-த்தை குளம் தூர்வாரும் பணிக்கு கோவையைச் சேர்ந்த விவசாயி வழங்கிய நிகழ்வு அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஒன்றரை கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6,000 கவுரவ ஊக்கத்தொகையாக வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, முதற்கட்டமாக, ரூ. 2,000 வழங்கும் திட்டத்தினை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலுச்சாமி, இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 2,000-க்கான தனது காசோலை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விவசாயி வேலுச்சாமி பேசுகையில், "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சி நிலவிய போது, தங்கள் பகுதியில் உள்ள அச்சன்குளத்தை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், அப்போது போதிய நிதி இல்லை என அப்போதைய ஆட்சியர் கூறினார். நீண்ட கால அளவில் விவசாயிகளுக்குப் பலன் அளிக்கக்கூடிய வகையில், அச்சன்குளத்தை உடனடியாக தூர்வார வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, தனக்கு கிடைத்த கவுரவ ஊக்கத்தொகையின் முதல் தவணையை ஆட்சியரிடம் வழங்க முடிவு செய்தேன்," என்றார்.
நாடு முழுவதும் உள்ள ஒன்றரை கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6,000 கவுரவ ஊக்கத்தொகையாக வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, முதற்கட்டமாக, ரூ. 2,000 வழங்கும் திட்டத்தினை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலுச்சாமி, இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 2,000-க்கான தனது காசோலை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விவசாயி வேலுச்சாமி பேசுகையில், "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சி நிலவிய போது, தங்கள் பகுதியில் உள்ள அச்சன்குளத்தை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், அப்போது போதிய நிதி இல்லை என அப்போதைய ஆட்சியர் கூறினார். நீண்ட கால அளவில் விவசாயிகளுக்குப் பலன் அளிக்கக்கூடிய வகையில், அச்சன்குளத்தை உடனடியாக தூர்வார வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, தனக்கு கிடைத்த கவுரவ ஊக்கத்தொகையின் முதல் தவணையை ஆட்சியரிடம் வழங்க முடிவு செய்தேன்," என்றார்.