கோவையில் முறைகேடான செயலில் ஈடுபடும் பால் உற்பத்தியாளர் சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

கோவை : முறைகேடான செயல்களில் ஈடுபடும் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் பொருளாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை : முறைகேடான செயல்களில் ஈடுபடும் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் பொருளாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

கோவை மாவட்டம், ஒக்கிலிபாளையம் பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், சங்க தலைவர் மற்றும் செயலாளர் முறைகேடான செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். 

அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பால் உற்பத்தியாளர் சங்கம், தினமும் 4500 லிட்டர் பாலை விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறது. இதுவரையிலும், ஒரு லிட்டருக்கு ரூ.25 வழங்கி வருகிறது. இனிமேல், ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.35 வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், ஒக்கிலிபாளையம் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் செயலாளர் பினாமிகளை வைத்து பாலில் கலப்படம் செய்து, 200 லிட்டர் வரை மோசடி செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். இதனை ஆய்வு மேற்கொள்ளச் சென்ற நிர்வாகிகளை, ஆராய அனுமதிக்காமல் வெளியேற்றியுள்ளனர். 

இந்த விவகாரத்தில், வெளிப்படையான நடவடிக்கைகளை சங்க தலைவர் மற்றும் செயலாளர் மேற்கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...