நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக, சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக, சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் நேற்று மதியம் காட்டுத் தீ ஏற்பட்டது. மன்றாடியார் வனப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் அளவில் செடி, கொடிகள் தீயில் எரிந்து சாம்பலானது. மேலும், ஒரு சில காய்ந்த மரங்களும் தீப்பிடித்துக் கொண்டதால், தீயை கட்டுப்படுத்துவதில் வனத்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், காற்றின் வேகத்தின் காரணமாக, தீ வேகமாக பரவி வந்ததால், அதன் எதிர் திசையிலிருந்து எதிர் தீ மூட்டி, தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நேற்று முன் தின இரவு வரை வனத்துறையினர் மேற்கொண்டு வந்தனர். பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீ பரவாமல் கட்டுப்படுத்த பட்டாலும், ஒரு சில இடங்கள் வழியாகக் காட்டுத்தீ மேலும் சில வனப்பகுதிகளுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று அதிகாலையில் சற்று குறைந்த காற்றின் வேகம், மதியத்திற்கு மேல் மீண்டும் அதிகரித்து காட்டுத்தீ மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் தீ அதிகளவில் பரவி வருகின்றது.
மேலும், ஏற்கனவே, புல்வெளிகள், செடி, கொடிகள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளதால் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 100க்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையிலும், அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முதுலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப்பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் நேற்று மதியம் காட்டுத் தீ ஏற்பட்டது. மன்றாடியார் வனப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் அளவில் செடி, கொடிகள் தீயில் எரிந்து சாம்பலானது. மேலும், ஒரு சில காய்ந்த மரங்களும் தீப்பிடித்துக் கொண்டதால், தீயை கட்டுப்படுத்துவதில் வனத்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், காற்றின் வேகத்தின் காரணமாக, தீ வேகமாக பரவி வந்ததால், அதன் எதிர் திசையிலிருந்து எதிர் தீ மூட்டி, தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நேற்று முன் தின இரவு வரை வனத்துறையினர் மேற்கொண்டு வந்தனர். பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீ பரவாமல் கட்டுப்படுத்த பட்டாலும், ஒரு சில இடங்கள் வழியாகக் காட்டுத்தீ மேலும் சில வனப்பகுதிகளுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று அதிகாலையில் சற்று குறைந்த காற்றின் வேகம், மதியத்திற்கு மேல் மீண்டும் அதிகரித்து காட்டுத்தீ மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் தீ அதிகளவில் பரவி வருகின்றது.
மேலும், ஏற்கனவே, புல்வெளிகள், செடி, கொடிகள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளதால் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 100க்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையிலும், அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முதுலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப்பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.