நீலகிரியில் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தின் கீழ் 19 விவசாயிகளுக்கு நிதியுதவி ஆணை

நீலகிரி : நீலகிரியில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி வழங்குவதின் முதல் கட்டமாக, 19 நபர்களுக்கு நிதியுதவிக்கான ஆணை வழங்கப்பட்டது.

நீலகிரி : நீலகிரியில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி வழங்குவதின் முதல் கட்டமாக, 19 நபர்களுக்கு நிதியுதவிக்கான ஆணை வழங்கப்பட்டது. 



சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



இத்திட்டத்தின் கீழ் சொந்தமாக இரண்டு ஹெக்டர் வரை அரசு ஆவணங்களின்படி விவசாய பூமி வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ரூ2 ஆயிரமாக பிரித்து வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், 2018-19 நிதியாண்டிற்கான முதல் தவணைத்தொகை, அதாவது கடந்த டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான தவணைத்தொகை ரூ.2,000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்தின் தொடக்கமாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முதல் கட்ட நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, பிரதம மந்திரியால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின், நேரடி ஒளிபரப்பு நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். 



இந்த நிகழ்ச்சியினை, நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதையடுத்து, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி வழங்குவதின் முதல்கட்டமாக, 19 நபர்களுக்கு நிதியுதவிக்கான ஆணையினை வழங்கினர். 

மேலும், இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை மற்றும் இதர துறைகளின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் பற்றி பதாகைகள் மற்றும் செயல் விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக, காய்கறி விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...