மருதமலை அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு பின்புறம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் காட்டுத்தீ ஏற்பட்டது
கோவை : மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயை வனத்துறையினருடன் பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும் இணைந்து போராடி அணைத்தனர்.

மருதமலை அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு பின்புறம் உள்ள
மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது படிப்படியாக பிற பகுதிகளுக்கும் பரவியது. இதைக்கண்ட பொதுமக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வன ஊழியர்கள் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர்.
பின்னர், 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காட்டுத்தீ பட்டா நிலங்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. வனத்துறையினருடன் பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து தீயை அணைத்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதேபோல, மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறையினர் அமைக்கப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

மருதமலை அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு பின்புறம் உள்ள
மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது படிப்படியாக பிற பகுதிகளுக்கும் பரவியது. இதைக்கண்ட பொதுமக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வன ஊழியர்கள் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர்.
பின்னர், 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காட்டுத்தீ பட்டா நிலங்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. வனத்துறையினருடன் பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து தீயை அணைத்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதேபோல, மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறையினர் அமைக்கப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.