பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் தீ விபத்து : முதுமலை வனப்பகுதி எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

நீலகிரி : பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயால், பல ஏக்கர் வனம் கருகியதை அடுத்து, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் காட்டு தீ பரவாமல் தடுக்க வனத்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளது.

நீலகிரி : பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயால், பல ஏக்கர் வனம் கருகியதை அடுத்து, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் காட்டு தீ பரவாமல் தடுக்க வனத்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளது. 



நீலகிரி மாவட்டத்தில், முதுமலை, மசினகுடி போன்ற பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனை ஒட்டியுள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதிகளிலும், வறட்சி நிலவுகிறது. அதனால், அதிக வறட்சியின் காரணமாக, இலைகள் மற்றும் காய்ந்த சருகுகள் வனத்தில் உள்ள மூங்கில் மரங்களுடன் உரசி வனத்தீ ஏற்பட்டது. 



அதன் பின்னர், இந்த வனத்தீ மளமளவெனப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் தீ மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே, காட்டு தீ முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் பரவாமல் தடுக்க வனத்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளது. மேலும், இதற்காக, வனத்துறையினர் முதுமலை எல்லையில் முகாமிட்டுள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...