கர்நாடகா : பெங்களூரூவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியின் கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்தன.
கர்நாடகா : பெங்களூரூவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியின் கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்தன.

பெங்களூரூ சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ந் தேதி பெங்களூரூ எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தி வருகின்றன. இந்த நிலையில், இன்று கண்காட்சியின் 4-வது நாள் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

அப்போது, கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அங்கு காய்ந்த புற்கள் பரவி இருந்ததால், தீ அப்படியே அங்கு நின்றிருந்த கார் டயர்களுக்கு பரவியது. இதில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரூ சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ந் தேதி பெங்களூரூ எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தி வருகின்றன. இந்த நிலையில், இன்று கண்காட்சியின் 4-வது நாள் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

அப்போது, கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அங்கு காய்ந்த புற்கள் பரவி இருந்ததால், தீ அப்படியே அங்கு நின்றிருந்த கார் டயர்களுக்கு பரவியது. இதில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.