நோயாளிகளை பாதிக்கும் விதமாக கோவை அரசு மருத்துவமனையில் பட்டாசு வெடித்தும், மேளம் கொட்டியும் அமைச்சர்களுக்கு வரவேற்பு : பொதுமக்கள் அதிருப்தி

கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய சேவை மையத்தை திறந்து வைக்க வந்த அமைச்சரை, நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், அரசு அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்தும், மேளம் கொட்டியும் வரவேற்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய சேவை மையத்தை திறந்து வைக்க வந்த அமைச்சரை, நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், அரசு அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்தும், மேளம் கொட்டியும் வரவேற்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் மற்றும் (DEIC) மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மைய தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில் அமைச்சர்களுக்கு மருத்துவமனை நுழைவு வாயிலில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல, அமைச்சர்கள் மருத்துவமனைக்குள் வந்தவுடன் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர் மத்தளம் அடித்து வரவேற்றார். இது மருத்துவமனையில் இருந்தவர்கள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தியது. பின்னர், அமைச்சர்கள் மேளத்தை நிறுத்தும்படி கூறியதையடுத்து, மேளம் அடிப்பது நிறுத்தப்பட்டது.



மருத்துவமனை முன்பு சத்தம் எழுப்பக் கூடாது என்ற விதி இருக்கும்பட்சத்தில், மருத்துவமனை வளாகம் அருகே பட்டாசுகளை வெடிப்பதும், மேளம் அடித்து சத்தத்தை எழுப்புவதையும் கண்டிக்காத அரசு அதிகாரிகளின் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...