குடிநீர் வசதி கோரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த பொதுமக்கள்

கோவை : கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிவீதியில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை : கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிவீதியில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 85-வது வார்டு செட்டிவீதி பகுதியில் குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி இன்று காலை பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கு வந்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சமரசப்படுத்த முயன்றார். ஆனால், சமரசம் அடையாத பொதுமக்கள், எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டு சரமாரி கேள்விகளைக் கேட்டனர்.

இதனால், ஆவேசமடைந்த எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன், பொதுமக்களை சமரசப்படுத்துவதை விடுத்து, பெண்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சீராக குடிநீர் விநியோகம் செய்து தருமாறு அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பொது மக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...