கோவை : கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிவீதியில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை : கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிவீதியில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 85-வது வார்டு செட்டிவீதி பகுதியில் குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி இன்று காலை பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கு வந்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சமரசப்படுத்த முயன்றார். ஆனால், சமரசம் அடையாத பொதுமக்கள், எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டு சரமாரி கேள்விகளைக் கேட்டனர்.
இதனால், ஆவேசமடைந்த எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன், பொதுமக்களை சமரசப்படுத்துவதை விடுத்து, பெண்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சீராக குடிநீர் விநியோகம் செய்து தருமாறு அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பொது மக்கள் கலைந்து சென்றனர்.
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 85-வது வார்டு செட்டிவீதி பகுதியில் குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி இன்று காலை பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கு வந்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சமரசப்படுத்த முயன்றார். ஆனால், சமரசம் அடையாத பொதுமக்கள், எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டு சரமாரி கேள்விகளைக் கேட்டனர்.
இதனால், ஆவேசமடைந்த எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன், பொதுமக்களை சமரசப்படுத்துவதை விடுத்து, பெண்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சீராக குடிநீர் விநியோகம் செய்து தருமாறு அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பொது மக்கள் கலைந்து சென்றனர்.