கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடி! டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

கோவை : பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதியை முறையாக பராமரிக்காத விடுதிக் காப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.


கோவை : பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதியை முறையாக பராமரிக்காத விடுதிக் காப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

பாலசுந்தரம் சாலையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது. இவ்விடுதியில் 174 கல்லூரி மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இவ்விடுதியின் பராமரிப்பு பணிக்கென ஒரு விடுதிக்காப்பாளர், 3 சமையலர், ஒரு உதவி பணியாளர், ஒரு துப்புரவுப் பணியாளர் என மொத்தம் 6 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நிலையில், இவ்விடுதியின் சமையல் அறை, மாணவர்கள் அறை, கழிப்பறை, மற்றும் விடுதி வளாகம் என ஒவ்வொரு பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி திடீரென இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இவ்விடுதி வளாகத்தினை முறையாக பராமரிக்காமல் இருந்த காரணத்திற்காக, தனது பணியினை சரிவர மேற்கொள்ளாத விடுதி காப்பாளர் ஆர்.ஜெகநாதனை தற்காலிக பணியிடைநீக்கம் செய்ய ஆட்சியர் கு. இராசாமணி உத்தரவிட்டார். 

மேலும், விடுதியினை முறையாக இருதினங்களுக்குள் சீர்செய்யும்படியும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...