கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறவும், நல்ல மதிப்பெண்கள் எடுக்கவும் பெற்றோர் பாத பூஜை வழிபாடு நடத்தினர்.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறவும், நல்ல மதிப்பெண்கள் எடுக்கவும் பெற்றோர் பாத பூஜை வழிபாடு நடத்தினர்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் ஒருசேர அமர வைத்து, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் செஞ்சேரி ஆதினம் முத்துசிவராம சுவாமிகள் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

இதனையடுத்து, மாணவ, மாணவிகள் தங்களைப் பெற்ற தாய் தந்தையின் பாதங்களைக் கழுவி மாலை அணிவித்து பூஜைகள் செய்து ஆசியை பெற்றனர். மேலும், அனைத்து மாணவ, மாணவிகளும் தங்கள் பெற்றோர்கள் மட்டுமின்றி வந்திருந்த அனைத்து பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கினர். குறிப்பாக, கற்றுக் கொடுத்த குருவான ஆசிரியர்களின் பாதங்களை வணங்கியும் ஆசி பெற்றனர்.

இது குறித்து, பள்ளி நிர்வாகம் சார்பில் கூறுகையில், "இந்த பூஜை மாணவர்களுக்கு, எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொதுத்தேர்வுகளை சந்திக்கவும், வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத் தந்த பெற்றோரின் அன்பும், ஆசியும், எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தவும் நடத்தப்பட்டது, என்றனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளி செயலாளர் சிந்தனை கவிஞர் கவிதாசன், முதல்வர் உமா மகேஸ்வரி ,கல்வி ஆலோசகர் வே.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் ஒருசேர அமர வைத்து, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் செஞ்சேரி ஆதினம் முத்துசிவராம சுவாமிகள் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

இதனையடுத்து, மாணவ, மாணவிகள் தங்களைப் பெற்ற தாய் தந்தையின் பாதங்களைக் கழுவி மாலை அணிவித்து பூஜைகள் செய்து ஆசியை பெற்றனர். மேலும், அனைத்து மாணவ, மாணவிகளும் தங்கள் பெற்றோர்கள் மட்டுமின்றி வந்திருந்த அனைத்து பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கினர். குறிப்பாக, கற்றுக் கொடுத்த குருவான ஆசிரியர்களின் பாதங்களை வணங்கியும் ஆசி பெற்றனர்.

இது குறித்து, பள்ளி நிர்வாகம் சார்பில் கூறுகையில், "இந்த பூஜை மாணவர்களுக்கு, எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொதுத்தேர்வுகளை சந்திக்கவும், வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத் தந்த பெற்றோரின் அன்பும், ஆசியும், எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தவும் நடத்தப்பட்டது, என்றனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளி செயலாளர் சிந்தனை கவிஞர் கவிதாசன், முதல்வர் உமா மகேஸ்வரி ,கல்வி ஆலோசகர் வே.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.