நீலகிரி : கூடலுார் நாடுகாணி அருகே ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் விலையுயர்ந்த மரங்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், பல்வேறு சிறு உயிரினங்களும் பலியாகின.
நீலகிரி : கூடலுார் நாடுகாணி அருகே ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் விலையுயர்ந்த மரங்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், பல்வேறு சிறு உயிரினங்களும் பலியாகின.
நாடுகாணி அருகேயுள்ள 'கோல்ட்மைன்ஸ்' வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. தொடர்ந்து, அந்த தீ பொன்னுார், பொன்வயல் வனப்பகுதிகளுக்கும் பரவியது. இது குறித்து தகவலறிந்து வந்த வனச்சரகர் சரவணன் தலைமையிலான வன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெயிலின் தாக்கம் மற்றும் காற்றின் வேகத்தால், தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் பல ஏக்கர் பரப்பிலான புல்வெளி எரிந்து சாம்பலானது. இந்த காட்டுத் தீ விபத்தின் போது, பறவை ஒன்று தனது குஞ்சுகளைக் காக்க போராடிய காட்சி வன ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், பல சிறு வன உயிரினங்கள் மற்றும் விலையுயர்ந்த மரங்களும் எரிந்து சாம்பலாகின.
நாடுகாணி அருகேயுள்ள 'கோல்ட்மைன்ஸ்' வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. தொடர்ந்து, அந்த தீ பொன்னுார், பொன்வயல் வனப்பகுதிகளுக்கும் பரவியது. இது குறித்து தகவலறிந்து வந்த வனச்சரகர் சரவணன் தலைமையிலான வன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெயிலின் தாக்கம் மற்றும் காற்றின் வேகத்தால், தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் பல ஏக்கர் பரப்பிலான புல்வெளி எரிந்து சாம்பலானது. இந்த காட்டுத் தீ விபத்தின் போது, பறவை ஒன்று தனது குஞ்சுகளைக் காக்க போராடிய காட்சி வன ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், பல சிறு வன உயிரினங்கள் மற்றும் விலையுயர்ந்த மரங்களும் எரிந்து சாம்பலாகின.