காட்டேரி பூங்காவில் சீசனுக்கு 1.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய முடிவு

நீலகிரி : குன்னூரில் உள்ள காட்டேரி பூங்காவில் முதல் சீசனுக்காக ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி : குன்னூரில் உள்ள காட்டேரி பூங்காவில் முதல் சீசனுக்காக ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



நீலகிரி மலை மாவட்டம் என்பதால் சுற்றுலா தளங்கள் அதிகளவு உள்ளன. இதன் காரணமாக, உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். குன்னூரை பொறுத்தவரையில், சுற்றுலா தளங்களாக சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, இயற்கைக் காட்சி முனைகளான லேம்ஸ், டால்பி நோஸ் போன்றவை உள்ளன.

குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் காட்டேரி பூங்கா உள்ளது. இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த பூங்காவில், ஆண்டுதோறும் முதல் மற்றும் இரண்டாம் சீசனுக்கு புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் முதல் சீசனுக்கு 1.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

இதில் டேலியா, சால்வியா, பெட்டோனியா, பிளாக்ஸ் போன்ற 17 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. மேற்கண்ட மலர் நாற்றுகளுக்கான விதைகள் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளிருந்தும், உள்நாட்டிலிருந்தும் வரவழைக்கப்பட்டு விதைக்கப்பட்டுள்ளன. இவை நாற்றுகளாக வளர்ந்தபின், நடவு செய்யும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...