சூடான் அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து கோவையில் பயிலும் சூடான் நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை : சூடான் அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து கோவையில் பயிலும் சூடான் நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : சூடான் அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து கோவையில் பயிலும் சூடான் நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அந்நாட்டு மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி அராஜக போக்குடன் செயல்பட்டு வருவதாக சூடான் நாட்டு மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ராணுவ உதவியுடன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், போர்க்குற்றம், இனப் படுகொலை ஆகிய குற்றங்களில் தற்போதைய அதிபர் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருவதாகக் கூறி கோவையில் பயிலும் சூடான் நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



சூடான் நாட்டின் நலன் கருதி அதிபர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது தாய் மொழியில் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தங்களது மொழியில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்களை, கடந்து சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். 

கோவையில் சூடான் நாட்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...