கோவை மண்டலத்தில் ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் விநியோகிக்கப்படும் ஓட்டுநர் உரிமம்

கோவை : கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்று ஆகியவை இன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்பட்டன.



கோவை : கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்று ஆகியவை இன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்பட்டன. 

இது குறித்து கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது ;- கோவை மண்டலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் மாதம் சுமார் 11 ஆயிரம் ஒட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 20 ஆயிரம் வாகனங்களின் பதிவு சான்றுகள் பதிவு செய்யப்படுகின்றன.

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், தாராபுரம், உள்ளிட்ட 16 போக்குவரத்து கழகங்களில் இன்று காலை முதல் ஒட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றுகள் ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்பட்டன. 

இந்த ஸ்மார்ட் கார்டு மிகவும் பாதுகாப்பானது. மைக்ரோ சிப், கியூ ஆர் கோட் போன்ற வசதிகள் உள்ளன. அதே போல், ஹாலோகிரம் வசதியுடன் ஸ்மார்ட் கார்டுகள் வருகின்றன. இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் விதி மீறல்களில் ஈடுபடுவோர்களை ஏடி.எம்.கார்டு போல் 'ஸ்வைப்' செய்து கண்டுபிடித்துவிடலாம்," இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், கடந்த மாதமே இந்த திட்டம் சென்னையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அமலுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...